மழையனப் பெய்தாய் நீ…! - 2

Saturday, May 23, 2009


நீ தூங்குவதை
ரசிக்கத்தான்
இரவு
இத்தனை விழிகளோடு
வருகின்றதோ.


--------*----------*--------

ஒரே ஒருமுறைதான்
உச்சரித்தேன் உன் பெயரை
எதிரொலித்துக்கொண்டெ இருக்கின்றது
இன்னமும்
என்
இதய முகடுகளில்
மனச் சரிவுகளில்.


--------*----------*--------

காத்துக் கொண்டிருக்கின்றேன்
உன் காதலோடு
என் மரணத்திற்கு.


--------*-----------*--------

நீ…
அறுகில் இருந்தால்
நான்
தூரத்தில் தொலைந்து விடுகின்றேன்.


--------*-----------*---------

நீ விளக்கேற்ற வேண்டாம்
உன் புன்னகையில் ஒன்றை
பறித்து வை - போதும்
அது
பிரகாசித்துக் கொண்டிருக்கும்
விளக்கை விட இன்னும்
அழகாய்.

--------*----------*---------

0 comments:

Followers

save fishman

  © Blogger template Writer's Blog by Ourblogtemplates.com 2008

Back to TOP