சிறிது காற்று.

Sunday, May 31, 2009


நேற்றிரவு எங்கள் பகுதி மின்தடையினால் மிகுந்த சிரமத்துக்கு உள்ளானது. சாயிந்திரமே போய் விட்ட மின்சாரம் இரவு முழுவதும் வரவே இல்லை. மின் ஊழியர்கள் தெருவின் இரண்டு இடங்களில் பள்ளம் தோண்டி இருந்தார்கள். ஒயர் எரிந்ததுதான் காரணமெனவும் அதை சரிபடுத்துவது காலையில்தான் முடியும் என்றும் சொல்லி விட்டுப் போய் விட்டார்கள். வெயில் அடங்கி இரவு தொடங்கியதும் அதன் விளைவு அதிகமானது.

கனத்த போர்வையைப் போல் இருட்டு பகுதி முழுக்க போர்த்திக் கிடந்தது, சில வீடுகளில் தற்காலிக மின் விளக்கை ஒளிரவிட்டு இருளை விலக்கிக் கொண்டார்கள். மிச்ச வீடுகளில் மெழுகுவர்த்தி அனையாமல் எரிந்துக் கொண்டிருந்தது. ஆனால் வீட்டுக்குள் படுக்க விடாமல் நெருஞ்சி முள்ளைப் போல் உறுத்திக் கொண்டே இருந்த வெப்பத்தை யவராலும் விலக்கிக் கொள்ள முடியவில்லை. எல்லோரும் உஷ்… உஷ்... என்ற சப்தத்துடன் பேப்பரையோ முந்தானையையோ வீசிக்கொண்டு காற்றைத் தேடி மாடிகளுக்கு தஞ்சம் புகுவதை பார்க்க நேர்ந்தது. ஏதோ ஒரு விசும்பல் மேலெழுந்து தெருவெங்கும் விரவிக் கிடந்ததைப் போல இறுகிய மௌனம் எல்லா வீடுகளிலும் நிரைந்திருந்தது. மின்தடை என்பது அவ்வப்போது நிகழும் ஒன்றுதான் என்றாலும் நேற்று ஏற்பட்ட அனுபவம் முற்றிலும் புதிது.

மின்சாரம் இல்லை என்றதுமே ஒருவித வெறுப்புணர்வே மேலிட்டிருந்தது. இன்று எப்படி தூங்குவது என்ற என்னமே தூக்கத்தை களைத்து விட்டது. நான் பாயை விரித்த படுக்க ஆயத்தமான போது தூக்கத்திற்கான அறிகுறிகள் சிறிதும் என்னிடம் இல்லை. அடர்ந்திருந்த இருட்டை மெழுகுவர்த்தியின் சிறு வெளிச்சம் சற்று விலக்கியிருந்தது. சன்னல் அருகில்தான் படுத்தேன், எனக்கு முன்பே வெக்கை இடம் பிடித்திருந்தது. பொருமிக் கொண்டிருந்த வெக்கை மெல்ல மெல்ல உடலில் ஊறத் துவங்கி பின் அதன் பெருவாயில் என்னை போட்டு மென்று துப்பிக் கொண்டிருந்தது. வியர்வை பிசுபிசுக்க எரிச்சலுடன் புரண்டு கொண்டிருந்தேன். கண்களை இறுக மூடிக் கொண்டும் பிடித்த ஏதாவதொன்றை நினைத்துக் கொண்டும் மனதை அமைதி படுத்திப் பார்த்தும் தூக்கம் வரமறுத்து வெதும்ப துவங்கி விட்டது உடல். பகல் முடிந்து விட்டாலும் அது உமிழ்ந்துச் சென்ற வெப்பம் ஒரு வேட்டை நாயை போல அலைந்துக் கொண்டிருப்பதையும் அது தன் எச்சில் நாக்கோடு நம்மை நக்கிக் குடித்து விட தீராத வேட்கையோடு தரையில் படுத்திருப்பதையும் அப்போதுதான் உணர முடிந்தது.

எத்தனை முயற்சித்தும் தூக்கம் விலகிக் கொண்டே இருந்ததே தவிர இணக்கம் கொள்ளவில்லை. சிறிது காற்று வந்தால் போதும் என மனம் ஏக்கம் கொண்டு காற்றை யாசித்தது. சன்னல்கள் அனைத்தும் அகல விரிந்திருந்தும் சொட்டுக் காற்று உட்புகவில்லை. காற்றை முழுவதும் தன் இலைகளுக்குள் தேக்கி வைத்துக் கொண்டு ஏதோ ஒரு சொல்ல முடியாத துக்கத்தோடு உறங்கி விட்டதைப் போல மரங்கள் அசைவற்று நின்றிருந்தன. நான் பாயை சுருட்டிக் கொண்டு பால்கனி. வெளி வராண்டா, மாடிப்படி, மொட்டைமாடி என்று நள்ளிரவு கடந்து காற்றுக்காக ஏங்கி அலைந்துக் கொண்டிருந்தேன்.

மின் விசிறியின் சுழற்சியில் இத்தனைநாளும் மயக்கம் கொண்டே தூங்கிப் போயிருக்கின்றோம். அதன் சுழற்சி தடைப்பட்ட போது செயற்கைக் காற்றை உருவாக்கி வைத்து கொண்டுதான் நாம் சுவாசம் செய்துக் கொண்டு இருக்கின்றோமோ என்ற பயம் தொற்றிக் கொண்டு விடுகின்றது. காற்று வெறும் சுவாசத்திற்கு மட்டும்தானா அல்லது நம் உடம்பும் காற்றை சுவாசிக்கின்றதா என்ற எண்ணம் தோன்றுகின்றது. சீரான முறையில் சுவாசித்தாலே நோய் இன்றி வாழவும் உடல் மற்றும் மனதை திடமாக வைத்துக் கொள்ளலாம் என்று யோகா கற்றுத் தருகின்றது. அதி காலை வேளையில் காற்று வாங்குவதற்காகவே கடற்கரையை நாடி ஏன் இத்தனை கூட்டம் செல்கின்றது.

காற்றுக்காக நாம் எவ்வளவு ஏங்கி இருக்கிறோம் என்பதையும், காற்றுக்கு வேலிக்கட்ட முடியாது என்ற பழமொழியை செல்லாததாக்கிவிட்டு காற்றுக்காக காத்திருக்கவும் காற்றைத் தேடிச் செல்லவும் துவங்கி விட்டோம் என்பதை பாதி தூக்கம் பறிபோன நிலையில் நன்கு உணர முடிந்தது.

இறந்துக் கொண்டிருந்த மிருகத்திலிருந்து வெளிபடும் மூச்சை போல் விட்டுவிட்டு சிறிது சிறிதாய் வீசியக் காற்றில் பின்னிரவுக்கு மேல் கண்ணயர்ந்து தூங்கிப் போய்விட்டேன். காலையில் எழுந்த போது உடம்பு முழுதும் வெப்பமேறிப் போய் மோத்திரம் கடுத்துவிட்டிருந்தது.



------------------------------------////////---------------------------------------------


குறிப்பு; - தலைப்பு எஸ.ராவின் ‘சிறிது வெளிச்சத்தை’ நினைவுப் படுத்தும் நானும் அவ்வண்ணமே இத்தலைப்பை தேர்ந்தேன். முதலில் வேறு தலைப்புதான் இட்டிருந்தேன் இது இதற்கு பொருந்தும் என்பதால் இதுவே வைத்து விட்டேன். மேலும் நேற்று என்பது கடந்த வெள்ளி இரவு.




அன்புடன்…
ஆ.முத்துராமலிங்கம்

Read more...

மூன்று கவிதைகள்

Thursday, May 28, 2009

தலைபற்ற இரண்டுக் கவிதை

நீ விரட்டிய
பிரகாரப் புறாக்கள்
வட்டமடித்து விட்டு
மீண்டும் வந்தமருகின்றது
உன் விரட்டலை யாசகம்
பெற.
நீ மீண்டும் கைகளை வீசுகின்றாய்
உன்னில் விரிந்து மறைகின்றது
ஒரு பறவையின் சிறகு.
-*-

உன் சுவடுகளைப் பின்பற்றி
நடக்க துவங்குகின்றேன்
நீண்டுச் செல்லும் உன் பாதை
என்னை குழந்தையாக்கி கூட்டிச்
செல்கின்றது.
நான் பருவங்களை இழந்து
பின்னோக்கி தவழத் துவங்குகையில்
உன் சுவடுகளை அழித்தபடி
என்னை முந்திச் செல்கின்றது மழை.
-*-

கொக்கு
அதன் வென்மை நிரம்
இயல்பாகவே பிடித்த ஒன்று
நீண்ட கால்களும் வளைந்த கழுத்தும்
புரியாததொரு கேலித்தளுடன் அதை
ரசிக்கச் செய்து விடும் எப்பொழுதும்.
மேலும் கீழுமாக ஏறிஇறங்கிச் செல்லும்
அதன் நடை பார்க்கச் சலிக்காதொன்று.
நீண்ட நேரம் காத்து நின்று
சட்டென்று ஒரு கனத்தில் வெகு லாவகமாக
நீந்தியலைந்த மீனொன்றை கொத்திப்
பறந்துச் செல்லும் அதன் சாமர்த்தியத்தை
விழி மூழ்கி ரசித்துக் கொண்டிருக்கின்றேன்.
துடிதுடித்து இறந்துக் கொண்டிருக்கின்றது
அதன் கூரிய நகத்துக்குள் அகப்பட்டிருந்த மீன்.


Read more...

விசித்திரி.

Tuesday, May 26, 2009



நேர்த்தியாக வரைபப்பட்ட ஓவியமொன்றின்
முதல் கோடுத் தேடி பயணிக்க துவங்குகின்றேன்.
வர்ணங்களில் சிதைந்திருக்கும் பிம்பங்கள்
ஒவ்வொன்றாய் மீட்டெடுத்துச் செல்கையில்
இழந்து கொண்டே வருகின்றேன் என் முகங்கள்
ஒவ்வொன்றாய். மலை உச்சியிலிருந்து விழும்
அருவியின் பேரிரைச்சல் தற்கொலைக்கான
காரணங்களை சத்தமாகக் கூறுவதாகவும்
உதிரந்த சருகுகளின் சரசரப்புகள் வாழ்தலின்
பிசுருகளாக நீங்கிவிட்ட ஏக்கங்களை
முனுமுனுப்பதாகவும் பசித்தக் குழந்தையின்
வீங்கிய கன்னமும் முலையொட்டிய ஒரு தாயின்
கண்ணீரும் வெவ்வேறு வண்ணங்களில் படிந்திருப்பதை
எச்சில் கொண்டு அழித்து விடுகின்றேன்.
கூடு விட்டு வெகுதூரம் இரைத் தேடிச் செல்லும்
பறவையின் தவிப்பை சிறகுகளின் கீழான
சிறுக் கோடு காட்டிவிடுகின்றன.
இன்னும் என் பயணத்தை நீட்டியிருக்கையில்
காடு மலை நதி கடல் என கடந்துச்
செல்கின்றது. எதிலும் என் தேடுதலுக்கான
முடிதலின்றி முடிவற்று நிர்க்கையில் காலடியில்
விரியத் துவங்குகின்றதொரு வர்ணங்களற்ற வெளி.
நான் துவக்கத்தை கண்டெடுக்க முடியாதவனாய்
திரும்புக் கொண்டிருக்கின்றேன் வர்ணங்களப்பிய
மேனியுடன் அழிந்திருந்த ஓவியத்திலிருந்து
உயிர் பெற்றவனாய்.

Read more...

வலையைக் கடித்த எலி

Sunday, May 24, 2009


நண்பர்கள் எல்லோருக்கும் வணக்கம்
மொதல்ல நான் யாருன்னு சொல்லிகிரேன்… நான்தாங்க ‘பதின்மரக்கிளை’ன்னு பதிவுள கவிதை எல்லாம் எழுதிகிட்டு இருந்தவன்.

என் வலை முடிந்த 18-05-2009 அன்று ஏதோ ஒரு சுப லக்கனத்தில் நல்ல நேரம் இரவு 12 மணிக்கு மேல் யாரும் விழித்திராத போது கவனிக்காமல் விடபட்ட கொடிய நோயால் (அதாங்க ntamil உண்டு பண்ணிய வைரஸ்) சமாதி நிலை அடைந்து விட்டதை வருத்தத் தோடு தெரிவித்துக் கொள்கின்றேன். மேலும் துக்கம் நடந்த வீட்டுல உடனே ஒரு நல்லகாரியம் நடக்கனும்னு பெரியவங்க சொல்லுவாங்க அதனால நான் கையோட இந்த புதிதாக இந்தத் தளத்தை துவங்கியுள்ளேனுங்க (எல்லாம் உங்க மேல உள்ள தைரியத்துலதான்).

இப்ப மேட்டருக்கு வரேன்!
எனக்கு 18-05-2009 அன்று என்னுடைய ‘முடிச்சு’க் கவிதைக்கு (அது முடிஞ்சி போன ஒன்னுங்குறீங்களா) நண்பர் ஆதவா பிண்ணூட்டமாக
உங்கள் தளத்தில் ntamil.com மால்வேர் கொண்டிருப்பதாக தகவல் வருகிறது. தேவையற்ற தளங்களின் தொடுப்புகளை நீக்கிவிடவும்”.
என்று எச்சரித்திருந்தார். எனக்கு அதை பற்றிய சரியான புரிதல் இல்லாமல் அதற்கான அக்கறை இன்றி நிதானமா ntamiலை நீக்கி விடலாம் என்று இருந்து விட்டேன். அதுதான் என்னக்கு நானே வைத்துக் கொண்ட ஆப்பு!!!. (சுயபுத்திதான் இல்ல சொல்புத்தியுமா இல்லங்கரது இதுதானோ) இரவு 11 மணிவரை நண்பர்களுக்கு பிண்ணூடமிட்டு விட்டுதான் அன்று சென்றேன். அது வரைக்கும் நல்லாதான் இருந்தது மறுநாள் காலையில் (19-05-2009) அன்று என் கனைக்கை திறந்த போது அதிர்ச்சி. என் டேஸ்போர்டில் ‘பதின்மரக்கிளை’ இல்லை. அதிர்ந்து போய் என் வலை முகவரியை (http:muthu5.blogspot.com) தேடினேன்...
Blog has been removed
Sorry, the blog at muthu5.blogspot.com has been removed. This address is not available for new blogs.
Did you expect to see your blog here? See: 'I can't find my blog on the Web, where is it?'


இப்படி அழிந்து விட்டதாக வந்தது. விசயம் என் திர்ச்சியை மீறிவிட்டிருந்தது புரிந்தது. உடனே நண்பர் ஆதவாவிற்கு ஒரு குறுந்தகவல் ஒன்றை அனுப்பினேன் அவர்தான் என் பிரச்சனை என்ன என்பதை அறிந்து ஒரு சுட்டியை அனுப்பினார். இதை கிளிக் செய்து நீங்களும் பார்க்கலாம்….
என் பதின்மரக்கிளை இங்கு உள்ளது பார்க்க மட்டுமே செய்யலாம்.

இதில் ntaml மற்றுப் gumblar இவ்விரண்டிலும் வைரஸ் உள்ளதாகவும் அதன் விளைவாக என் வலையை தற்காலிகமாக அழித்து விட்டதாகவும் சொல்லப்படுகின்றது. மேலும் கூகிலிடம் தளத்திற்குரியவர் கேட்டுக் கொண்டால் திரும்ப தரப்படும் ஆனால் எப்பன்னு எங்களுக்கே தெறியாது (வரும் ஆனா வராது… ங்ர கதை) என்று சொல்லப்பட்டு விட்டது.

இப்படி நம்மிற்கு தெரியாமலோ அல்லது கவனக்குறைவாலோ இது போன்ற அசம்பாவிதங்கள் நேர்ந்து விடும் அபாயம் பெருகிவிட்டது. ஆதலால் நண்பர்களே நம் தளத்தை பாதுகாக்க சற்று கவனம் கொள்ளுங்கள் (இது கூட தெரியாத உன்னமாதிரி முட்டால் இல்ல நாங்கன்னுரவங்க விட்டுடலாம்). நம்மளுடைய பதிவை மாதம் ஒரு முறையாவது சேமித்து வைத்துக் கொண்டால் நல்லது.
இப்படி செய்க;
Blog - Settings - Export a blog - Download Blog
அடுத்ததாக இதே போல் டேஸ்போர்டின் கீழ் இருக்கும் Webmaster Tools னுள் சென்று நம் வலைத்தளம் என்ன நிலையில் உள்ளது என்று பார்த்துக் கொள்ளலாம்.

வைரஸ் தாக்கப்பட்ட என் தளத்தின் தகவல்களை கீழே பாருங்கள்


நம் தளம் நள்ள முறையில் இருந்தாள் அனைத்துப் பகுதியிலும் 'டிக்' செய்திருக்கும் தளம் பாதிக்கப் பட்டிருந்தால் 'அபாயக்' குறியிட்டு அதற்க்கான விளக்கமும் கொடுக்கப் பட்டிற்கும்.
இதைப் பற்றி மேலதிக விபரம் தெரிந்தவர்கள் பிண்ணுட்டத்தில் தெரிவியுங்கள், மேலும் மூத்தப் பதிவர்கள் இது பற்றி தெளிவானதொரு பதிவை இட்டால் புதியவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று என்னுகின்றேன்.

தளத்தை பறிகொடுத்தவன் என்ற முறையில் இதை வலியுறுத்தி உங்களுடன் பகிர்ந்து கொண்ண்டேன். முடிந்த அளவு தளத்தை பாதுகாக்க கவனம் கொள்ளுங்கள் அவ்வளவே இப்பதிவின் நோக்கம்.

இன்னும் தலைப்புசார்ந்த ஒரு எலியை ச்சி.. ச்சி.. வரியைக் கூட கானுமேன்னு தேடுறது புரியுது. அது என்னன்னா... நம்ம கனிணியில் வால் புகுத்தி மேஜையில் படுத்திருக்குமே... எலி அத கொஞ்சம் கவனமா உபயோகப் படுத்துங்க கண்ட இடத்துல மேய விட்டா இப்படிதான் நம்ம வலையையே கடிச்சு நாசம் பண்ணிரும்.


நன்றி.
என்றும் அன்புடன்,
ஆ.முத்துராமலிங்கம்.

Read more...

யாரோ… அவள்

Saturday, May 23, 2009


டே! எறும எழும்புடா மணியென்னாவுது என்றபடி போகிறவாக்கில் காலால் உதைத்து எழுப்பி விட்டுச் சென்றான் வினாயகம்

9 மணிக்கெல்லாம் முதல் ஒரு சுற்று எழுந்து செய்வன செய்துவிட்டு பின்புதான் மீண்டும் படுத்தேன். மாத முதல் தேதி என்பதால் அந்த வாரம் முழுக்க வேளை பளு அதிகம். அந்த சடவில் அயர்ந்து தூங்கிவிட்டேன் இதோ நம்ம வினாயகம் உதைத்தபோதுதான் தூக்கம் களைந்தது.

சோம்பல் முறித்துக் கொண்டு படுக்கையிலிருந்தே மணியை பார்த்தேன்
மணி 5.

அச்சச்சோ…. தீ நகருக்கு போக என்னியிருந்தேனே, திங்ககிழமையே திட்டம்போட்டது. இந்த மாதம் சம்பளம் வாங்கியதும் அம்மாவுக்கு ஒரு சேலையும் எனக்கு சிலதும் வாங்க வேண்டுமென்று. கொஞ்சம் முன்னாலே போனா நின்னு நிதானமா எடுக்கலாம் அப்படியே கூட நாளு பொன்னுங்களையாவது பார்த்து… ரசிச்சி… சிரிச்சி…. அப்படி இப்படி இந்த ஞாயிற்றுக்கிழமையை கலகலப்பா கழிச்சியிருக்கலாம். ப்ச் இப்படி தூங்கி கழிச்சிட்டியே சோம்பேரி சோம்பேரி என்று திட்டியது மனசு, மலமலவென குளித்து புறப்பட்டு வேகவேகமாக நடந்துகொண்டே ஓடினேன் பேரூந்து நிறுத்தம் நோக்கி. பேரூந்து நிறுத்தம் வந்து சேருகையில் மணி எப்படியும் ஆரை தாண்டியிருக்கும், மேற்கில் கட்டடங்களுக்கிடையில் சூரியன் மூழ்கிக்கொண்டிருந்தான். ஐந்…து நிமிடம் காத்திருந்தும் பஸ்ஸைக்காணோம் எரிச்சலாயிருந்தது. சற்று நேரத்தில் ஒரு நீச்சல் வீரனைப் போல் சாய்ந்து சாய்ந்து வந்தது ஒரு மிதவைப் பேரூந்து. கூட்டம் அதிகம் தான் வேறு வழி? எறிக்கொண்டேன், படியைத் தாண்டி செல்ல முடியவில்லை அங்கிருந்தே பயணச் சீட்டை பெற்றுக்கொண்டேன். அதன் பின் வந்த நிறுத்தத்தில் ஏறியவர்கள் என்னையும் சேர்த்து கூட்டத்தினுள் புகுத்திவிட்டனர், எவ்வளவு முயற்சி செய்தும் என் சொந்தகாலில் நிர்க்க என்னால் முடியவில்லை, வியர்வை பிசுபிசுத்த முதுகுகளுக்கு பின்னால் நின்று கொண்டு மூச்சிவிட முடியவில்லை தொண்டைக்குழியில் ஏதோ அடைத்தது, சகிக்க முடியாமல் வலதுபக்க இருக்கையின் கம்பியை பிடித்துக் கொண்டு அதில் அமர்ந்திருந்தவரை இடித்துக் கொண்டும் சன்னல் பக்கமாக முகத்தை நீட்டிக்கொண்டேன் காற்று சுகமாய் வந்தது.





இரண்டு மூன்று நிறுத்தங்களைக் கடந்ததும் கூட்டம் ஓரளவுக்கு குறைந்துவிட்டிருந்தது. என் அருகில் ஒரு முதியவரும் அவரைத் தாண்டி இன்னும் சிலரும் என் பின்னால் ஐந்தாறு பேரும் நின்றிருந்தனர். சன்னல் வழியாக சிலுசிலுவென வந்தக் காற்று மயிர்க் கால்கெலெங்கும் மயிலிரகாய் வருடிவிட்டுச் சென்றது அதில் ஒரு புது சுகானுபவத்தை உணர்ந்தேன். அப்பாடா…. என்றபடியே மூச்சை நன்கு உள்ளிளுத்து விட்டுக் கொண்டு என்னை ஆசுவாசப் படுத்திக்கொண்டேன்.

சிறிது நேரத்தில் என் அறிகில் நின்றிருந்த முதியவரும் சற்று தள்ளிப் போய்விட்டார் அப்போதுதான் தெரிந்தாள் அவள்… மேகம் விலகிய முழுமதியைப் போல் பிரகாசமாய். அப்படி ஒன்றும் ஆளைமயக்கும் பேரழகியல்ல ஆனால் நாம் சுற்றுலா சென்றுவிட்டு வந்த பின்பும் சில நாட்களுக்கு ஓர் இனம் புரியாத சுகம் நம் மனதில் ஒட்டிக் கொண்டிருப்பதைப் போல மனதுக்குள் பனி தூவி பச்சைத் தீட்டியது அவளின் அளவான அழகு. சலனமற்ற முகம் நேர்த்தியானப் பார்வை அளவான பேச்சு காதுக்கு நேர் கீழ்கழுத்தில் ஒருமச்சம். பார்க்க பார்க்கா அவளின் வட்டபாதைக்குள் நின்று கொண்டது என் பார்வை.

அவள் அறிகில் இருந்தது அவள் அம்மாவாகத்தான் இருக்க வேண்டும் அதான் அடக்கமாய் அமர்ந்திருந்தால். அவள் அம்மா எதேதோ பேசிக்கொண்டேயிருந்தால் அவளும் எதோ பதில் சொல்லி விட்டு புன்னகையுடன் முடித்தால், உதடு பிரியாத அவளின் அந்த சிரிப்பு என்னை மேலும் அவளிடம் ஈர்த்தது. அவள் ஜடையில் சிக்காத சில முடிகள் அவள் முகத்தில் சரிந்து விழுந்ததை அவ்வபோது சரிசெய்து கொண்டால் ஆனால் அவள் அழகில் சரிந்து கொண்டே இருக்கும் என் மனதை தடுக்க முடியவில்லை.

அவள் என்னுள் ஏதோ செய்தால்... ம் அப்படிதான் சொல்ல முடியும். என் கால்கள் தரையில் இருப்பதாய் எனக்குத் தோன்றவில்லை மேல் கம்பியை பிடித்திருந்த என் கைகள் ஏனோ அங்கும் இங்கும் இடம் மாறியது, இதயத் துடிப்பு கூட எப்போதும் போல் சாதாரன நிலையில் இல்லை வேகம் கூடியிருந்தது, என் உடலில் ஒரு மின்சார அலை பரவியிருந்ததை உணரமுடிந்தது.

இனிப்பைச் சுற்றும் எறும்பு போல் நான் அவளையே பார்ப்பதை எவரும் கவனித்து விடுவார்களோ என்ற சிறு அச்சம் எறும்பு போல் கடித்தது. அங்குமிங்கும் திரும்பி பார்த்துக் கொண்டேன் யாரும் என்னை கவனித்ததாய் தெறியவில்லை ஆனால் அவளை இருவர் கவனித்துக் கொண்டிந்ததை பார்த்தேன் மனம் அவர்களை வில்லன்களாக்கியது. அவர்கள் மூஞ்சில் ஓங்கி ஒரு குத்து விடனும் போலிருந்தது, ஒரு பொன்னு கொஞ்சம் அழகா இருந்திடக் கூடாத அப்படியே வச்ச கண் வாங்காம பார்ப்பாங்கள… மனம் மேலும் திட்டியது. இந்த நேரத்தில் பார்த்து சாலையில் எந்த தடங்களுமின்றி பேரூந்து விரசலாய் போய்கொண்டிருந்தது என்னை மேலும் கடுப்பாக்கியது.

எப்படியும் அவளும் தீநகருக்குதான் வருவாள் என்று நம்பியது மனம். ஆனால் நம்பிக்கையை பொய்யாக்கிவிட்டு அதற்கு இரண்டு நிறுத்தத்திற்கு முன்பே இறங்கி விட்டால். அரைமணி நேரம் ஒரு பெருமழை போல் என்னுள் நிரம்பியவள் அரைநொடியில் கானல் நீராய் விலகிப்போவதை நினைக்க கஷ்ட்டமாகத்தானிருந்தது.

என்னுள் இத்தனை பாதிப்பிகளை உண்டாக்கிவிட்டு அவள் அதே அமைதியுடன் சலனமற்று இறங்கிக்கொண்டிருந்தாள். மலைமுகட்டு மேகம் போல் அவள் மீதே கவிழ்ந்திருந்தது என் பார்வை. அவள் இறங்கி பேரூந்து வந்த திசைநோக்கி நடக்க ஆரம்பித்தால், பேரூந்தும் கிளம்பிற்று பின்புற கண்ணாடி வழியாக எட்டிப்பார்த்தேன் சற்று தூரம் சென்றவள் வலது பக்கமாக இருந்த தெருவில் நுழைந்து மறைதாள். அதுவரையில் ஒரு சித்திரக்கரனைப்போல் வர்ணங்களை மாறிமாறி பூசியவள் சட்டென்று காற்றைப்போல் கடந்து போய்விட்ட சிறுவலியுடன் தலைகவிழ்த்து தரைப்பார்த்து நின்றிருந்தேன்.

‘யாம்பா வழியில நின்னுக்கினு என்ன பகல்கணவா கண்டுக்கினுருக்க மத்த ஆல் போத்தேவல’ என்றொரு குரல் கேட்டுத் திறும்பிப் பார்த்தேன் பெருத்த மீசையுடன் முரைத்துப் பார்த்தார் ஒரு நபர், புன்னகையுடன் நகர்ந்தேன்.

Read more...

அலைகளையை கொலை செய்தவன்


கால்களை தொட்டுச் சென்ற
அலைகளை துரத்திச் சென்றேன்
உள்ளிழுத்து சென்ற அலை
உருவம் அழிந்து கடலானது.
அடையாளம் கண்டு கொள்ள
இயலாதவனாய் நுரைகளை
உதறிவிட்டு திரும்புகையில்
அது மற்றொரு அலையாக வந்து
என்னை முழுதும் நனைத்து விட்டு சென்றது.

-*-

அப்பகல் ஒன்றும்
முக்கியமானதாய் இல்லை

நனைந்த உன் ஆடைகளை
உலறவைத்ததை தவிர வேறெதுவும்
செய்திருக்கவில்லை

வார்த்தைகளை தேடி
கண்களை கடலில்
புதைத்திருந்த போது
அது நம் இடை வெளியில்
படுத்திருந்தது

மெளனங்களை உதிர்த்துக்கொண்டிருந்த
நாம் விழிகளை இறக்கி விரல்களை
தீண்டுகையில் அப்பகல் முடிந்து விட்டிருந்தது.

-*-

உன்னை நனைத்துவிட்டுச் சென்ற
அவ்வலையை கொலைசெய்யும்
நோக்கத்துடன் வெளியில் காத்திருந்தேன்.
வரும் ஒவ்வொரு அலையையும்
இடைமறித்து கொலை செய்தேன்.
அவைகள் மீண்டும் மீண்டும் பெருக்கெடுத்துக்
கொண்டே இருக்கின்றன
நம் காதலை போல.

-*-

Read more...

ஒற்றையடிப் பாதை


புற்களுக்கு நடுவில்
அழகாய் நீண்டுச் சென்றிருக்கும்.
அதன் உருவகம் ஆச்சரியம்
தருபவையாகவே இருந்தது
கால்நடைகளும் கால்தடங்களும்
பூமியில் ரேகையிட்டு வைத்ததோ
என்று கூட எண்ணியிருக்கிறேன்
ஊரைவிட்டு விளகி புறதான பாதையிலிருந்து
கிளைத்து ஒரு நதியை போலவே
பயணித்து எல்லைகளை பிணைத்திருக்கும்
விபரம் அறியதுவங்கிய வயதுக்கு முன்
அதனுடன் சினேகம் இருந்தது
சைக்கிள் டயரை உருட்டி செல்லவது
வாத்தியாருக்கு பயந்து தூரத்து
புலியமரத்தில் தஞ்சம்புகச் செல்வது
சக நண்பர்களோடு சுற்றிதிரிவது என்று
என் பால்யத்தின் தடங்கள் அப்பாதையில்
பதிந்து கிடந்தது.
அப்பாவிற்க்கு இன்னும் நெருக்கமாக
இருந்தது. அப்பாவின் வேலைகளை
சுலபமாக்கவும் சாத்தியப்படுத்தவும்
இதுவே அதிகம் உதவியிருக்கும்
எப்போதும் அப்பாதைமண் அப்பாவின்
வெடித்த பாத இடுக்கில் ஒட்டிக்கொண்டிருக்கும்.
தாமதமாக வீடுதிரும்பும் ஆடுகளை கூட
இதுதான் அழைத்து வரும்.
ஒற்றையடிப்பாதையை போலவே
பால்யத்தின் நினைவுகள்
மனவெளியில் நீண்டக் கோடாய்
பதிந்து கிடக்கின்றன அதன் வழியில்
சென்றால் திரும்பவும் பால்யத்திற்கே
சென்றுவிடுவோமா என்ற ஏக்கத்துடன்
அதன்றுகில் சாய்ந்து கிடக்கின்றது
கழிந்து போன அகவைகள்.

Read more...

சூன்யப்பிறவி


நீண்ட சிந்தனைக்குப் பின்னும்
ஒற்றை வாரத்தையும்
உருப்பெறாமல் உடைந்து
சிதறிக்கிடந்தது வார்த்தைகளனைத்தும்.

அறைமுழுதும் வியாபித்திருந்த
உன் பிம்பங்கள் நிலைகொள்ளாத
என்னங்களை காரணமற்ற திசையில்
குவித்துக் கலைத்துப் போட்டது.

நடுப்பகல் வெயிலில் புலுதிமண்ணில்
உருண்டு புரளும் கழுதையென மனம்
வெறுப்புற்று வெறுமையின் வனாந்திரதில்
தனித்துக் கிடந்தது.

பொறுமை இழந்த மின் விசிறி
விரித்து வைத்திருந்த வெற்றுக்
காகிதத்தை திரும்ப திரும்ப
கீழெறிந்தது.

பேனாவின் கூர் முனை
சொற்க்களை கொலை செய்து
குப்பையில் போட்டிருந்தது.

இருக்கை, விரல்கள், பார்வை
சுவாசம் எதுவும் என் வசம் தவறி
மண்டைகூடுடைத்து சில கொம்புகளும்
முதுகுத்தண்டின் கிளைந்தெழுந்த ஒற்றை
சிறகுமாய் என் இருப்பை சூன்யத்தின்
கோரக்கனங்கள் மாற்றியிருந்தது.

பற்கள் நீண்ட உன் நினைவுகள்
என் சுவாசத்தை நெறிக்கையில் அம்
மாய கனத்தின் விளங்குடைத்து
வெளிப்பட்ட நான் விரல்களை
என்னிபார்த்து விட்டு
சன்னல் அறுகில் வந்து வெளிபார்த்தேன்
சூடு குறைந்த அம்மாலை வெயில்
என் மெய்புலன்களை மீட்டுதந்தது

அறுகில் நின்றிருந்த தென்னையில்
யாரையும் கவனிக்காமல்
கட்டுகளற்ற சுதந்திரத்துடன்
புணர்ந்துக் கொண்டிருந்தன
இரு அனில்கள்.

Read more...

மழையனப் பெய்தாய் நீ…! - 3


உன் காதலில்
நான்
ஊஞ்சலாடுகின்றேனா…?
ஊசலாடுகின்றேனா…?!

-----*-----

உன் அறிமுகத்தில்
விடைப்பெற்றுக் கொண்டது
என்
அமைதி.

-----*-----

உன்னைப் பற்றியே
சிந்தித்து சிந்தித்து
எனக்கு நானே
அன்னியமாகிவிட்டேன்.

-----*-----

மூழ்கிக் கொண்டே
இருப்பேன் - உன்
கரம் பற்றும் வரை!

-----*-----

உன்
புன்னகையைத் தோண்டினால்
கண்டுப்பிடிக்கப் படலாம்
காணாமல் போன
பலரது இதயம்!

-----*-----

வார்த்தைகளற்ற மொழி….
உன் மௌனம்
வாக்கியமற்ற கவிதை….
உன் புன்னகை.

-----*-----

கல்லுடைக்கும்
தொழிலாலியின் கடைசி
நிமிட பரபரப்பை போல்
நீ
பார்க்கும் ஒவ்வொரு நொடியிலும்
நான்.

-----*-----



என் வயதுகளில்
சிலவை வெற்றிடங்களாகவே
இருப்பதை பற்றி
என் பிள்ளைகள் என்னிடம்
கேட்குமாயினில்
நான் என்ன பதில் சொல்வது

வெற்றிடம் முழுவதும்
வியாபித்திற்கும் உன்னைப் பற்றியா?
வெற்றிடமாக தோற்றமலிக்கும்
நம் காதலைப் பற்றியா?

-----*-----

Read more...

மழையனப் பெய்தாய் நீ…! - 2


நீ தூங்குவதை
ரசிக்கத்தான்
இரவு
இத்தனை விழிகளோடு
வருகின்றதோ.


--------*----------*--------

ஒரே ஒருமுறைதான்
உச்சரித்தேன் உன் பெயரை
எதிரொலித்துக்கொண்டெ இருக்கின்றது
இன்னமும்
என்
இதய முகடுகளில்
மனச் சரிவுகளில்.


--------*----------*--------

காத்துக் கொண்டிருக்கின்றேன்
உன் காதலோடு
என் மரணத்திற்கு.


--------*-----------*--------

நீ…
அறுகில் இருந்தால்
நான்
தூரத்தில் தொலைந்து விடுகின்றேன்.


--------*-----------*---------

நீ விளக்கேற்ற வேண்டாம்
உன் புன்னகையில் ஒன்றை
பறித்து வை - போதும்
அது
பிரகாசித்துக் கொண்டிருக்கும்
விளக்கை விட இன்னும்
அழகாய்.

--------*----------*---------

Read more...

தொலையும் நான்………. தொலைவில் நீ!


உன் தொலைபேசி
அழைப்பிற்க்காக
காத்திருக்கின்றேன்.

வேகு நேரமாகியும்
உன் அழைப்பின்றி
அதிர்ந்து நொருங்குகின்றது
மனம்.

பிறகு உன் அழைப்பொலி
கேட்டு வேகமெடுத்த தொடர்
வண்டியைப்போல் இதயத்துடிப்பின்
வேகம் உயர்ந்து சுற்றமும் மங்களாய்
மறைந்தோடுகின்றது.

நடுங்கும் விரல்களை
நிறுத்த முடியாமல்
தடுமாறி எடுக்கின்றேன்
முந்தகூவியை.

எதிர்முனையில் நீ
எப்போதும் போல்
நிதானமாய் சிரிக்கின்றாய்.

என்காதுகளில் வந்து
விழுகின்றது உன் சிரிப்பொலி
பனிக்கட்டியை தூளாக்கியது போல்

ஒலி கடத்தும் ஊடகம்
முதன் முதலில் குளிர்
கடத்துகின்றது உன்னால்.

உனக்காக வைத்திருந்த
வார்த்தைகளனைத்தும்
உதிர்ந்து ஊமையாகி
நிர்கின்றேன் எப்போதும் போல.

எல்லாம் பேசிமுடிந்து
நம் தொடர்பை துண்டிக்கின்றாய்
உயிரின் ஓரத்தில் வலிக்கின்றது.

மீண்டும்
நினைத்துக் கொண்டேன்
உன் அடுத்த அழைப்பிலாவது
நான் தொலைந்து போகாமலிருக்க
வேண்டுமென.

Read more...

மழையனப் பெய்தாய் நீ…!


ஓ….
பிரம்மா
நீ யேசித்துப் பார்த்தாயா
ஒரு பென்னிர்க்கு
அழகு கொடுக்கையில்...

பல ஆண்கள் அசிங்கப் படபோவதை!


--------*-----------*--------

என்
உயிரில் பரவிய
வைரஸ்
உன்
நினைவுகள்.


--------*------------*-------
உன்
காதலில்
நான்
உயரத்தில் பறக்கும்
பட்டம்….!

உன்
கையில் தான்
உள்ளது
நான்
மீள்வதும்
வீழ்வதும்.


--------*-------------*--------

உன் கையில்
விளையாட்டுப் பொருள்
என் இதயம்

என் கையில்
விளைமதிப்பற்ற
பொக்கிஷம்
உன்
உடைந்த வலையல்
துண்டுகள்.


--------*--------------*--------

Read more...

காதல்


இளமையின் சிலந்திவளை
சிக்காதவர் எவருமில்லை
வாலிபத்தின் பருவமுத்திறை
பதியாத நெஞ்சொன்றுமில்லை
பருவ வாசலின் முதல் படி – இதில்
ஏறித்தான் செல்லவேண்டும் அடுத்த படி.,
*

வாழ்கையின் வசந்தகாலம்
வாழ்ந்தவர் அடைந்த ஞானம்
கனவுகளின் கலைகூடம்
கலையாத பசுமை வேடம்.
*

தனிமைதான் இதற்கு நன்பன்
நிலவுதான் இதற்கு தூரத்து சொந்தம்
மலர்கள்தான் இதற்கு மகுடம்.
*

வானவில் சாலையில் வண்ணப்பயணம்
முட்கள் பதிந்த காலனித்தொட்டு
பூமஞ்சத்தில் பனி போல் தூக்கம்
தென்றல் கூட புயல்தான் அதற்கு,
*

காதல் ஒரு நெருப்பு
அளவாக எரிந்தால் தீபம்
அதிகமாக எரிந்தால் சாபம்!

இந்த தீ
கொஞ்சம் விசித்திரமானதும் கூட
இதயத்தில் எரிந்து கொண்டே இருக்கும்
அதன் ஜுவாலை உணர்வில் குளிரூட்டும்
ஆதலால் இது
குளிரும் நெருப்பு.
*

காதல் ஒரு பள்ளி
உன்மையான பள்ளி

இங்கு சேர சாதி சான்றிதல் தேவையில்லை
மத அடிப்படையில் பிரிப்பதில்லை
பணம் அந்தஸ்து பார்ப்பதில்லை.

கண்ணையும் பேசவைத்தது
மெளனத்தையும் மொழியாக்கியது
உயிரையும் உணரவைத்தது
விரகத்தையும் விளங்கவைத்தது.
*

கண்ணுக்கு இமையே சிறையா
காதலென்பது பகையா?
கடலுக்கு அலையே சுமையா
காதலென்பது பழியா?

குன்றாய் நின்ற நெஞ்சும்
காதல் முகில் தொட்டால் பனியும்
கல்லாய் இறுகிய மனமும்
காதல் சாரல் விழுந்தால் கரையும்
தறுகாய் வளர்ந்த உள்ளமும்
சருகாய் எரியும் – காதல்
சுடர் விழுந்தால்
*

காதல் புனிதமானது
ஆனால்!
காதலிப்பதுதான் பாவம்

காதல் தெய்வீகமானது
ஆனால்!
காதலிப்பவர்கள்தான் தீண்டதகாதவர்கள்
*

காதல்…
இளமையின் இனிய வரம்
இதயங்கள் இனையும் பாலம்.

Read more...

ஈழத்துளிகள் (ஹைக்கூ)

: குண்டுகள் துளைத்த
சுவற்றில் குருவியின் கூடு.


: பள்ளி விட்டதும்
விரைந்து வந்தது
கவச வாகனம்.


: வீடுகள் பாதுகாப்பானவையல்ல
உணர்த்துகின்றது
மரக்கிளையில் குழந்தையின்
தொட்டில்.


: சப்தம் கேட்டு எட்டிப்பார்த்தது
பொந்துக் கிளி
முரிந்து விழுந்தது மரம்.


: அடித்து சாத்தியது கதவு
ஆளில்லாத வீட்டில் காற்று.


: விமானம் பறந்து சென்றபின்
வீதியில் கிடந்தது பாட்டியின்
சுருக்குப்பை.


: மிச்சமிருந்த முந்தையநாள்
உறக்கமும் பாழாய் போனது
அகதிகள் முகாமில் துயிலாத விழிகள்.

Read more...

விட்டுவை…

புதிதாய்
இன்னொரு மரத்தை
நட்டு வைக்க வேண்டாம்
இருக்கும் மரத்தையாவது
விட்டு வைப்போம்
போதும்….
இன்னொரு தலைமுறையின்
தாகம் தீர்க்க.

Read more...

Followers

save fishman

  © Blogger template Writer's Blog by Ourblogtemplates.com 2008

Back to TOP