உணர்வீர் வஞ்சப்புகை நெடி!

Monday, January 31, 2011

இரசிக்கம் பழகிவிட்டோம்
தொட்டி மீண்களையும் - சவப்
பெட்டி மீனவனையும்.

**

'சூரியனின் உதயத்தில் கடல்
செந்நிறமாய் மின்னுகிறது' இல்லை
அது மாயை நன்கு உற்றுப் பாருங்கள்
அது எங்கள் மீனவர்களின் குருதி.

**

கடிதமும் அறிக்கையும் கண்துடைப்பும்
போதும்... கொஞ்சம் எங்கள் கடற்கரைக்கு வாருங்கள்
தோட்டாவின் வஞ்சப்புகை நெடி உங்கள் நாசியை
துளைத்துச் செலவதை உணர்வீர்கள்!
கொஞ்சம் கால் நனைத்துப் பாருங்கள் உங்கள்
கால்களை சுற்றி நிற்கும் ஒரு தாலி கயிற்!
கொஞ்சம் எடுத்துப் பருகிப் பாருங்கள் உரைக்கும்
எங்கள் கண்ணீரின் சுவை!
கொஞ்சம் காது வைத்துக் கேளுங்கள்... கேட்கும்
ஓயாமல் ஒலித்துக் கொண்டே இருக்கும் எங்கள்
அழுகை!!

**

Read more...

Followers

save fishman

  © Blogger template Writer's Blog by Ourblogtemplates.com 2008

Back to TOP